திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, January 3, 2020

VITEEE applications open - 2020 for B.Tech admission

Please visit only 
https://viteee.vit.ac.in for admissions


சிபிஎஸ்இ தேர்வு எழுத 75% வருகை பதிவு தேவை!!


சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடக்க இருக்கிறது.

மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் 2020 ஜனவரி 1ம் தேதி யுடன் முடிந்த காலத்தில் 75 சதவீத பள்ளி வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். குறைவான அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

குறைந்தபட்ச வருகைப்பதிவு பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்படும். குறைந்த அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களை ஜனவரி 7ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு வருகைப் பதிவுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் ஏற்கப்படமாட்டாது.

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - Certificate Verification - Intimation


Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Revised List for 3 Subject & Other Department Provisional Selection List


SBI Clerk Recruitment 2020 – Apply Online for 8134 Posts

Name of the Post           : SBI Clerk Online Form 2020
Post Date                        : 02-01-2020
Latest Update                 : 03-01-2020
Total Vacancy                 : 8134
Brief Information                             : State Bank of India (SBI) has given an employment notification for the recruitment of Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre (Regular & Backlog) vacancies. Those Candidates who are Interested to the following vacancy and completed all Eligibility Criteria can read the notification & Apply online.
State Bank of India (SBI)
Clerk Vacancies 2020
Advt No. CRPD/CR/2019-20/20
 Application Fee 
  • For General/ OBC/ EWS: Rs. 750/- (Including Intimation Charges)
  • For SC/ST/PWD/XS: Rs. 125/- (Intimation Charges Only)
  • Mode of Payment: Debit card/ Credit card/ Internet Banking
Important Dates
  • Starting Date for Apply Online & Payment of Fee: 03-01-2020
  • Last Date to Apply Online & Payment of Fee       : 26-01-2020
  • Last Date for Editing Application Details              : 26-01-2020
  • Last Date for Printing Your Application                : 10-02-2020
  • Date of Preliminary Examination (Tentative)       : February/ March  
  •                                                                                                  2020
  • Date of Downloading Admit Cards (Prelims Exam): 11-02-2020 
  •                                                                                    (Tentatively)
  • Date of Downloading Admit Cards (Main Exam): 2nd Week of April 
  •                                                                              2020 (Tentatively)
  • Date of Main Examination (Tentative)                : 19-04-2020
 Age Limit (as on 01-01-2020)
  • Minimum      : 20 years
  • Maximum     : 28 years
  • Age Relaxation is applicable as per rules.
Qualification
  • Graduation in any discipline.
Vacancy Details
Jr Associate (Customer Support & Sales)
Sl No Circle NameRegularBacklog 
1
Ahmedabad
55070
2
Amravati
1500
3
Bangalore
4750
4
Bhopal
70050
5
Bengal
6500
6
Bhubaneswar
4250
7
Chandigarh
4250
8
Chennai
4000
9
Delhi
3930
10
Delhi/ Chandigarh
970
11
Hyderabad
3750
12
Jaipur
5003
13
Kerala
4000
14
Lucknow/ Delhi
8650
15
Maharashtra/ Mumbai Metro
8650
16
Maharashtra
100
17
North Eastern
31511
18
Patna
2750
Special Recruitment Drive
19
Chandigarh
 700
20
North Eastern
600
  Interested Candidates Can Read Full Notification Before Apply Online
Important Links 
Apply OnlineRegistration | Login
NotificationClick Here
 Official Website Click Here

Thursday, January 2, 2020

தொலைநிலைப் படிப்புகளை வழங்க மேலும் ஒரு தமிழக பல்கலைக்கழகத்துக்கு அனுமதி

தொலைநிலைப் படிப்புகளை வழங்க சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதியளித்துள்ளது.

 இதன் மூலம், தமிழகத்தைச் சோ்ந்த 11 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிற கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் செல்லாது.

 தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.

 அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

 இந்தப் புதிய நிபந்தனை காரணமாக, தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றன.

 கோவை பாரதியாா், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பிற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியாத நிலை உருவானது.

 அதன் பின்னா், 2018 டிசம்பா் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23 கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20 கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.

 பின்னா், 2019 மே 8-ஆம் தேதி மூன்றாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கும், தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என கூடுதலாக மூன்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி அளித்தது.

 தொடா்ந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு 2019-20 கல்வியாண்டுக்கும், 2020 ஜனவரி சோ்க்கைக்கும் அனுமதி அளித்தது. அதுபோல, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கும் யுஜிசி அனுமதி அளித்தது. தற்போது சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு தன்னாட்சி அந்தஸ்து: இந்த நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 4 கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு தன்னாட்சி அதிகாரத்தை யுஜிசி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 கல்வி நிறுவனங்களும் யுஜிசி அனுமதி பெறாமலே தொலைநிலைப் படிப்புகளை தொடா்ந்து நடத்த முடியும்.

 அட்டவணை:

 எந்தெந்த பல்கலைக்கழகங்கள்? எந்த ஆண்டு வரை?

 சென்னைப் பல்கைக்கழகம்                                                    - 2022-23
 அண்ணா பல்கலைக்கழகம்                                                    - 2022-23
 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்                - 2022-23
 மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்                                    - ஜனவரி 2020 மட்டும்
 மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்       - ஜனவரி 2020 மட்டும்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
                                                                                                                    - ஜனவரி 2020 மட்டும்
 பெரியாா் பல்கலைக்கழகம்                                                     - ஜனவரி 2020 மட்டும்
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்)
 தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி - (சிறப்பு தன்னாட்சி அதிகாரம்).

நெட் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்கு 60,147 பேர் தேர்ச்சி


நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ நடத்தி வந்த இந்த தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.  நடப்பாண்டிற்கான நெட் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 219 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வில் 7 லட்சத்து 93 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.

அதன் முடிவு https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியது. அதில் 60 ஆயிரத்து 147 பேர் உதவிப்பேராசியர் பணிக்கும், ஐந்தாயிரத்து 92 பேர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி பெற்றதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Wednesday, January 1, 2020

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

பெற்றோர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நீட்தேர்வு விண்ணப்பிக்க ஜனவரி 6 வரை காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் இல்லை எனவும் அறிவிப்பு.

ஜனவரி இருதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்


மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. 

பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது "காலிப்பணியிட விபரங்கள் முழுமையாக பெறப்பட்டு கலந்தாய்வுக்கு தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

WISH YOU HAPPY NEW YEAR TWENTY - 20