திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, November 7, 2019

நவம்பர் 14 - செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் பேசுங்ககள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - பெற்றோர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு!


குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதியாவது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ஒரு மணி நேரம் உங்களுடைய குழந்தைகளுடன் மனசுவிட்டு பேசுவதற்கு நேரத்தை செலவிடுங்கள் என்ற, பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரை, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி யுகத்தில், ஆறாம் விரலாய் மாறிவிட்ட, ஸ்மார்ட் செல்போனால், குடும்ப உறவுகளுக்கான நெருக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

சமூக ஊடகங்களில் நண்பர்களை தேடுவோர், வீட்டிலிருப்போருடனான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கான நேரத்தை செலவிடுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதும் அவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பெருமாபாலான கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment