திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, April 16, 2019

ஏழை மாணவர் இடஒதுக்கீடுக்கு கூடுதலாக 2 லட்சம் இடங்கள்

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய, பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான, 10 சதவீத இடஒதுக்கீடுக்காக, மத்திய கல்வி நிறுனங்களில், கூடுதலாக, இரண்டு லட்சம், சீட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய, பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு, அரசு வேலை மற்றும் கல்வியில், 10 சதவீத இட ஒதுக்கிடு வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட திருத்த மசோதா, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில், சமீபத்தில் நிறைவேறியது. இதையடுத்து, மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, 2019 - 20 கல்வியாண்டில், ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 983 இடங்களும், 2020 - 21 கல்வியாண்டில், 95 ஆயிரத்து, 783 இடங்களும் புதிதாக உருவாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், முடிவுசெய்துள்ளது. இதற்காக, 4,315 கோடி ரூபாய் கூடுதல் நிதிஒதுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கல்வி நிறுவனங்களில், இரண்டு லட்சம் கூடுதல் இடங்களை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, நேற்று ஒப்புதல் அளித்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனுமதி பெற்று, பின் அமைச்சரவை குழுவின் ஒப்புதலை பெற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment