திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, April 24, 2020

சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை, கோவை, மதுரையில் 26 - ம் தேதி காலை முதல்  29 - ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாகவும்,  சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல்  28 - ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ள  முதல்வர்  கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment