திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 18, 2020

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தாமதமின்றி வழங்கப்படும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்


வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தாமத மின்றி வழங்கப்படும் என்று தமிழ் நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக் கான பாடப்புத்தக்கங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் முடிந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அச்சிடுதல் பணி நிறுத்தி வைக்கப் பட்டது.

இதனால் பாடபுத்தகம் விநியோகம் தாமதமாகுமோ என்ற அச்சம் நிலவியது.இந்நிலையில் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி கூறும்போது, ‘‘புதிய பாடத்திட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்ட சில வகுப்புகளுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணிகளே இன்னும் மீதமுள்ளன.

தற்போது அவையும் அடுத்த வாரம் முதல் குறைந்த அளவிலான பணியாளர் களை கொண்டு அச்சிடப்பட உள்ளன. எனவே, நடப்பாண்டு மாணவர்களுக்கு பாடநூல் கிடைப்பதில் தாமதம் ஏற்படாது’’ என்றார்.

No comments:

Post a Comment