திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, February 5, 2019

ஜிசாட் -- 31 நாளை ஏவப்படுகிறது

பெங்களூரு: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ஜிசாட்-31 செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து, நாளை ஏவப்பட உள்ளது.
   இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில், 40வது செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. ஜிசாட் - 31 என்ற இந்த செயற்கைக்கோள், பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

           தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும். இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள்.

No comments:

Post a Comment