திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, February 12, 2019

கலைத்திறன் இலக்கிய போட்டிகள்

சிவகாசி:

      சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான &'அய்ய நாடார் ஜானகி அம்மாள் நினைவு கேடம் - கலைத்திறன் சார்ந்த இலக்கிய போட்டிகள்&' நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். 

     தமிழ் ஆய்வு மையம் தலைவர் சிவனேசன் வரவேற்றார். பேச்சு, புதுக்கவிதை, சிறுகதை, கோலம், நாட்டுப்புறநடனம் , நகைச்சுவை துணுக்குகள் போன்ற போட்டிள் நடத்தப்பட்டது. மாநில முழுவதும் இருந்து 16 கல்லுாரிகளிலிருந்து 220 மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை இலக்கிய போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரி நினைவு கேடயத்தைக் கைபற்றியது. ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment