திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, October 14, 2019

அரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்....ஆச்சர்யத்தில் மக்கள் !!

அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தங்கள் பிள்ளைகளை கான்வென்ட் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க வேண்டுமென எண்ணும் இந்த காலத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளி படிக்க வைத்து அசத்தி வருகிறார்.


தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தால் தான் தங்களின் பிள்ளைகளால் வாழ்வில் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என பெற்றோர் உறுதியாக நம்புகிறார்கள்.

இதற்காக பலர் தங்களது சக்தியையும் தாண்டி லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து, தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படித்து வாழ்வில் உச்சத்தை தொட்ட அப்துல் கலாம் தொடங்கி இஸ்ரோ தலைவர் சிவன் வரை யாரை உதாரணம் சொன்னாலும் நம் சமூகத்தில் எடுபடுவதில்லை.

இத்தகைய சூழலில், மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.
ஆம்... 2009-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் அவனீஸ் ஷரன். இவர் சத்தீஸ்கர் மாநிலம், கபீர்தம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

அவனீஸ் தனது பெண் பிள்ளை வேதிகா ஷரனை அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் சேர்த்துள்ளார். தனது மகள் அரசுப் பள்ளி சீருடையில் இருக்கும் புகைபடங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷரன் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த சத்தீஸ்கர் மாநில மக்கள் பலரும், மாவட்ட ஆட்சியர் அவனிஷ் ஷரனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

"உங்களை போல் எல்லா அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்தால் நிச்சயம் அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்றும், உங்கள் முடிவு பாராட்டுக்கு உரியது" என்றும் அவர்கள் வாழ்த்தி உள்ளனர்.

"உண்மையில் உங்கள் செயல்பாடு உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது" என்றும் அந்த மாநில மக்கள் ஷரனை வியந்து வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment