திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, February 27, 2020

ஸ்கெட்ச் மற்றும் வண்ணப் பென்சில்கள் பயன்படுத்த தடை!

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச் மற்றும் வண்ணப் பென்சில்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வருகிற மார்ச் 2ஆம் தேதி பொதுத் தேர்வு  தொடங்க உள்ளது. தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மாணவர்களுக்கு தேர்வுத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, விடைத் தாளில் எந்தக் காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் வகையில் எந்த விஷயமும் இருக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment