திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, February 25, 2020

Matric, CBSE பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை!

RTE Tamil Nadu Admission 2020: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ பள்ளிகளையும் இணைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், சிபிஎஸ்சி பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில், ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக்கட்டணம் உள்ளிட்ட படிப்புச் செலவுகள் அனைத்தும் அரசே ஏற்கிறது.

இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறாத வகையைில், தனியார், மெட்ரிக் நர்சரி பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் தகுதியற்ற மாணவர்கள் இலவச கல்வி பெறும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று தமிழக அரசு கடந்தாண்டு தெரிவித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 655 சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.

இதனிடையே சில சிபிஎஸ்இ பள்ளிகளில், 25 இடஒதுக்கீடு முறையில் ஏழை மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்படுகிறது. ஆனால், அம்மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் அரசு செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தினாலும், சீருடை, புத்தகங்கள் போன்ற பிற செலவுக்கான தொகை அரசு வழங்குவதில்லை. மேலும், தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை சுமார் 600 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment