திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, February 26, 2020

பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை


அரசு மற்றும் தனியார்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகிறது. அப்போது, நடன போட்டிக்கான மேடைகளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்துவதால் மாணவ, மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

 இந்த நிலையில் ,

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதிகபடியான மின் வெளிச்சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் பள்ளிகளில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் நடைபெறும் போது, அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட்டுமே அமைத்திடவேண்டும். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழாநடத்தி, பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர்வாகமுமே முழு பொறுப்பேற்க நேரிடும். எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் .

No comments:

Post a Comment