திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, March 4, 2020

அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு!


அரசு கலை கல்லூரிகளில் ஆன்லைனில் சேர்க்கை

தனியார் கல்லூரிகளை போல, அரசு கலை கல்லூரிகளிலும், ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள், சுயநிதி பல்கலைகள் போன்றவற்றில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, ஆன் லைன் முறையில் நடத்தப்படுகிறது .

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், தமிழக உயர்கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கலை கல்லுாரிகளிலும், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதேபோல, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், ஆன்லைன் முறையில், மாண வர் சேர்க்கையை நடத்த, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்ப பதிவை அறிமுகம் செய்ய, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment