திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, December 16, 2019

தூத்துக்குடியில் போர்க்கப்பல் மாணவர்கள் பார்க்க அனுமதி

துாத்துக்குடியில் கடற்படை தினத்தையொட்டி மாணவர்கள் பொதுமக்கள் போர்க்கப்பலை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிச. 4ல் இந்திய கடற்படைதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டிச.14 மற்றும் 15ல் மாணவர்கள் துாத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்கு வரும் கடற்படை போர்க்கப்பலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிச.14ல் பகல்1:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி. டிச.15ல் உயர் கல்வி மாணவர்கள் பொதுமக்கள் காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரையிலும் பார்க்கலாம்.

போர்க்கப்பலை பார்க்க வரும் மாணவர்கள் பள்ளி சீருடையில் பள்ளி முதல்வர் தலைமையாசிரியரின் முத்திரையிட்ட மாணவர் பட்டியலுடன் வரவேண்டும். அவர்களுடன் ஆசிரியர்கள் வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் ஆதார் அட்டைகளை கொண்டு வரவேண்டும். அலைபேசி பை காமிராக்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. 

விபரங்களுக்கு 73562 18196 என்ற எண் ,enccomcentvlnavy@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment