திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, December 18, 2019

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு !


நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி திறன் இந்தியா இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . 

அதன்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு . ஜி . சி) உத்தரவிட்டு இருக்கிறது .

உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தில் ஓடுதல், யோகா, நீச்சல் உள்பட ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி  நிறுவனங்கள் தேர்வு செய்து, மாணவர்களை அதில் உட்படுத்த வேண்டும். அதற்கென்று தனியாக ஒரு மையத்தை அமைத்து, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதை உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இதை விரைந்து அமல்படுத்திட வேண்டும். மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment