திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 21, 2018

டெல்லியில் பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து; 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு

புதுடெல்லி,
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் பகீரத் பேலஸ் என்ற பகுதி அமைந்துள்ளது.  இங்கு மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன.  இந்த நிலையில் இன்று மதியம் திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடனடியாக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியை தொடங்கியது.
அதன்பின்னர் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment