திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, April 21, 2018

தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல்

தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல்
தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐதராபாத்,
தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கடிதம் வழியே அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.  இந்த மருத்துவமனை அமைவதற்கான நிலத்தினை அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு உத்தவிட்டும் உள்ளது.
இதற்காக ஐதராபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா மற்றும் வாரங்கால் மாவட்டங்களில் 200 ஏக்கர் நிலங்கள் தெலுங்கானா அரசால் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனை தவிர்த்து மஹபூப்நகர் மற்றும் சித்திபேட் ஆகிய பகுதிகளில் 2 மருத்துவ கல்லூரிகள் அமைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.  மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்வஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தெலுங்கானா சுகாதார துறை மந்திரி சி. லட்சுமா ரெட்டி கூறும்பொழுது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 2 மருத்துவ கல்லூரிகள் அமைவது மக்களுக்கு தரமுள்ள மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு உதவும் என கூறியுள்ளார்.
எனினும், நல்கொண்டா மற்றும் சூர்யாபேட் ஆகிய இடங்களில் அமையவுள்ள மற்ற 2 கல்லூரிகளுக்கான ஒப்புதலை அரசு நிலுவையில் வைத்து உள்ளது.

No comments:

Post a Comment