அடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்..
அடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரிக்கும் பாட புத்தகங்களில் அடுத்த ஆண்டு (2019-20) முதல் கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவிலான "கியூ ஆர் கோடு" என்ற புதிய வசதி இடம்பெறும் என்றும், நவீன கேமரா செல்போன் மூலம் அந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டி சுமை ரூ.6,600 கோடியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.4½ லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ரூ.7½ லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கான வட்டி சுமையை அரசு ஏற்கும் என்று கூறினார். மேலும் கல்விக்கடன் பெறும் மாணவர்கள், படிப்பை முடிக்கும் காலத்துடன் மேலும் ஒரு ஆண்டு வரை கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவேண்டியது இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment