திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, April 13, 2018

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோடை   விடுமுறை  முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்   என அமைச்சர் செங்கோட்டையன்   அறிவித்துள்ளார். புதிய  பாடத்திட்டம்  அமல்  படுத்த  ஏதுவாக  இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மேலும் அவர் கூறினார்

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கோடை விடுமுறையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரெடியா இருங்க! விரைவில் வரப்போகுது ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்!


ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன்களை தொடர்ந்து 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து ஸ்மார்ட்போன், ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில் அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவை சார்ந்த தகவல்களை மறுக்கும் வகையிலான தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் சத்தமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்களை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன.

'ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம்.' என குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார். இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்சமயம் புதிய பிரிவில் ஆதரவு வழங்க 14 டெலிகாம் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment