திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, April 5, 2018

அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை பரிந்துரைக்க அவகாசம்

சென்னை: அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை பரிந்துரைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. துணை வேந்தர் பெயர்களை பரிந்துரைக்க தேடல் குழுவுக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்



ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு ராஜஸ்தானிலல் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற மறியலில் 40 ரயில்கள் சிறைப்பிடிப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற மறியலில் 40 ரயில்கள் சிறைப்பிடிக்கப்பட்டது. மின்சார ரயில்கள் உட்பட 50 ரயில்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட ரயில்கள் 5 முதல் 30 நிமிடங்களுக்குள் விடுவிக்கப்பட்டன. சென்னையில் 10 மின்சார ரயில்கள், 4 விரைவு ரயில்களும்,  சேலம் மண்டலத்தில் 8 ரயில்களும் சிறைபிடிக்கப்பட்டது என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயில் சிறைபிடிக்கப்பட்டது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை


புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12,000 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். 



No comments:

Post a Comment