ஆக்ராவில் பெய்த கனமழையால் தாஜ்மஹால் நுழைவு வாயிலில் இருந்த தூண் இடிந்து விழுந்தது.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் நேற்று சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் மின் கம்பங்கள், மரங்கள் சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்தது. கனமழை பெய்ததால் தாஜ்மஹால் வளாகத்தில் தெற்கு நுழைவு வாயலில் உள்ள 12அடி உயரத் தூண் இடிந்து விழுந்தது.
இதில் அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் பெய்த பலத்த மழைக்கு 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment