திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, May 13, 2018

வேலூர் விமான நிலையத்தில் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பாக டெல்லி குழுவினர் ஆய்வு


Image result for airport
வேலூர் விமான நிலையத் தில் கட்டிடங்கள் அமைப் பது தொடர்பாக டெல்லி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

வேலூர்,

மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவ தும் பயனற்ற நிலையில் உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 100 விமான நிலையங்களை மத்திய விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் குழுவினர் ஆய்வு செய்த னர். தமிழகத்தில் வேலூர் மற்றும் ஓசூர், நெய்வேலியில் இருந்து புதிதாக சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப் பட்டது.

அதன்படி வேலூரில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு, திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக் கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து வேலூர் விமான நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை தொடங்க தமிழக அரசும் தடையில்லா அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து தென் மண்டல விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் வேலூர் அப்துல்லா புரத்தில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். விமான ஓடுதள பாதைக்கு கூடுதலாக நிலங்கள் தேவைப்படும் என்று அவர்கள், மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித் தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செங்கோட்டையன் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள புறம்போக்கு நிலங் களை கையகப்படுத் துவது குறித்து ஆய்வு மேற்கொண் டனர். தொடர்ந்து கலெக்டர் ராமன் 55 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

அதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து டெல்லி மத்திய விமான போக்குவரத்து ஆணையரகத்தின் நிலம் அளவீடு மற்றும் தொழில் நுட்பக்குழுவை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறைகள், ஓட்டல்கள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்தும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், மலைப்பகுதிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்றவை விமானங்கள் தரையிறங்கும் போது தடையாக இருக்குமா? என்றும், மேலும் விமான நிலையம் மற்றும் தரையிறங்கும் விமானத்துக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் குறித்து அதிநவீன எந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது விமான நிலையம் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிவில் என்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 3 பேர் நேற்று ஆய்வுப்பணிக்காக வேலூர் விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் விமான நிலையத்தின் நிலப்பரப்பு, ஓடுதளம் அமையும் பகுதி, கட்டிடங்கள் அமையும் பகுதி, விமானம் இறங்கி ஏறும் வகை யிலான ஓடுதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

ஒருவார காலம் இந்த ஆய்வு கள் நடைபெறும் என்றும், ஆய்வுக்கு பின்னர் 6 அடி உயரம், 850 மீட்டர் அளவுக்கு மொரம்பு மண் கொட்டி ஓடுதள பாதைகள் அமைக் கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment