திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, September 12, 2019

நவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு?

வரும் நவம்பர் 11 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரும் நவம்பர் 11 ஆம் தேதி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அண்மையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மும்மொழி கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மும்மொழிக் கொள்கை மட்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்பட்டது. இதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்தது. ஆரோக்கியமான கருத்துக்களை ஆராயும் வகையில், 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழு வரைவு அறிக்கையும் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரும் நவம்பர் 11ம் தேதி அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினம் ஆகும். அன்றைய தினத்தில் தான் புதிய கல்விக் கொள்கையும் அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக வரும் 25 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது ஆய்வுக் குழுவின் இறுதி வரைவு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. எல்லாவித திருத்தங்களும் நிறைவு பெற்ற பின்னர், இறுதியான அறிக்கை, தேசிய கல்வி தினத்தன்று மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment