திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, September 13, 2019

தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 2020

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  2020 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தின்படியே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் எழுதிக் கொள்ளலாம். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி 

                                                      ஏப்ரல் 2-  ஆம் தேதி       தமிழ், 
                                                      ஏப்ரல் 3-  ஆம் தேதி       ஆங்கிலம், 
                                                      ஏப்ரல் 7-  ஆம் தேதி       கணிதம், 
                                                      ஏப்ரல் 8-  ஆம் தேதி       அறிவியல், 
                                                      ஏப்ரல் 9-  ஆம் தேதி       சமூக அறிவியல் 

ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10 நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment