திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, September 18, 2019

சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி! மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!!

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில், இன்று வரை குளறுபடி நிலவி வருகிறது. இரண்டாவதாக வெளிவந்த தேர்வு பட்டியலிலும் குளறுபடி உள்ளது.


அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமன பட்டியலில் குளறுபடி உள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் தையல், ஓவியம், இசை என நான்கு பிரிவுகளில் சுமார் 1,325 முழுநேர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், அப்போது வெளியான சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரனை செய்த நீதிமன்றம், ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்து, புதிய பட்டியலை வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம், புதிதாக பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், இதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

முதலில் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியிலில் சுமார் 14 பேரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. இதே போல், முதல் பட்டியலில் இடம் பெறாத 6 பேரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 249 காலியிடங்கள் உள்ள ஆசிரியர்களுக்கு 209 பெயர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள காலியிடங்கள் என்ன ஆனது? யாருக்கேனும் முறைகேடாக ஒதுக்கப்படுகிறதா? இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர்கள் ஒன்றாக சேர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், ஆனால், அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சரிவர பதிலளிக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாநில மனித உரிமை ஆணையத்துக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்காக 2017ம் ஆண்டு போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில், தேர்வு பட்டியலில் முறைகேடுகள், குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பெரும் கண்டனம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment