திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, September 21, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

வாக்காளர்களுக்கு உதவ செயலி பயன்படுத்தப்படும். நாங்குநேரி தொகுதியில் 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 3 பேர் நியமிக்கப்படுவர். 30 பறக்கும் படைகள், 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகள் பொருந்தும். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் உள்ளன என கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கூறியதாவது:- 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் வீடியோ பதிவுமூலம் கண்காணிக்கப்படும். விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடியில் 2,23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என கூறினார்.

No comments:

Post a Comment